Skip to main content

பவழக் கொடி பஸ்பம்

 சுத்தி செய்த பவழக்கொடி..

..50 .. கிராம் அளவுக்கு..
பூங்காவி செல்லத்தக்க அளவுக்கு.. நாட்டு கோழி முட்டை வெள்ளைக் கரு செல்லத்தக்க அளவுக்கு ..


செய்முறை ::
பூங்காவியைக் கல்வத்தில் போட்டு வெள்ளைக் கருவைச் சிறுகச் சிறுக வார்த்து இரண்டு மணி நேரம் அரைத்து ஒரு விரற்கன முள்ள இரண்டு அகல்கல் செய்து ஒரு அகலில் மேற்கண்ட பவழக்கொடியைப் பரப்பி மறு அகலால் மூடி அதன் மீது சீலைமண் மூன்று செய்து உலர்த்தி கவசத்தின் எடைக்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் படியாக வராட்டியில் புடமிட்டு ஆறினை பின் எடுத்து கொண்டு அகலை பத்திரமாக
பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு எழுமிச்சம் பழச்சாற்றை சிறுகச் சிறுக விட்டு அரைத்து எடுத்து வில்லை தட்டி வெய்யிலில் காயவைத்து எடுத்து அகலில் வைத்து மேல் அகலால் மூடி வைத்து சீலைமண் மூன்று செய்து உலர்த்தி கவசத்தின் எடைக்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் படியாக வராட்டியால் புடமிட்டு ஆறின பிறகு எடுத்து கல்வத்தில் போட்டு மருந்தை பட்டுபோல்
அரைத்து எடுத்துக் கொள்ளவும்..


மருந்து அளவு ::
..2..முதல்..3..அரிசி எடை
அளவுக்கு..

துணைமருந்து ::
தேன்,, திப்பிலி இரசாயனம்,,
தாளிசாதி சூரணம்,, முதலியவைகளாம்..


தீரும்நோய்கள் ::
நாட்பட்ட இருமல்,, இரத்த சயம்,,
இரத்தகாசம்,, இரத்தவாந்தி,,
நுரையீரல் புண்,, ஆகியவைகள் தீரும்..!!

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...