Skip to main content

Posts

நோய் அறிதல்..( 1 )

  பீனிசம் மூக்கடைப்பு நோய்வகைகளும் மருத்துவமும் குறிகுணங்கள் :: மூக்கின் துளைகள் சிவந்து குருகுருத்துத் தும்மல் ஏற்படுதல்.. கண் சிவந்து காணப்படும்.. மூக்கினுல் அரிப்பெடுத்தல்.. நீர் வடிதல்.. தலை நோகுதல்.. அடிக்கடி மூக்கடைப்புடன் மூக்கைச் சிந்தல்.. சளி மற்றும் சீழ் வெளியாகுதல்.. மற்றும் திடீரெனக் குருதி கொட்டுதல்.. இயல்பாக இந்த நோய் வரும் வழிவகைகள் :: 1 ).. நன்கு கடுமையான வெயிலில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீர் பருகுதல்.. 2 ).. உடல் ஒவ்வாமை (அலர்ஜி) உள்ள சூழலில் பணி செய்தல் (அல்லது) குளிர்ந்த காற்றில் பயணித்தது.. 3 ).. புகை மற்றும் வாசனையான திரவியங்களைப் பயன்படுத்துதல் அல்லது நுகர்தல்.. 4 ).. புழுதி படிந்த காற்றைச் சுவாசித்தல்.. 5 ).. தும்மலை உண்டு பண்ணும் பொருட்களை நுகர்தல்.. 6 ).. உடலானது கூடுதல் வெப்பநிலையில் உள்ள போது குளிர்ந்த நீரில் உடனே குளித்தல்.. 7 ).. ஐஸ்கிரிம் மற்றும் குளிர்பானம் ( பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பானங்கள் ) பருகுதல்.. 8 ).. குறைந்த நித்திரை கொள்ளுதல் 9 ).. முறையற்ற வாசியோகப் பயிற்சிகள்.. ஆரம்ப கறி குணங்கள் :: ஒரு வகையான எரிச்சலும், ந...
Recent posts

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...

உடல் இளைக்க

  ஓமம் - 100 கிராம் சுக்கு - 100 கிராம் மிளகு - 100 கிராம் வாய்விளங்கம் - 100 கிராம் பெருங்காயம் - 20 கிராம் மலைப்பூண்டு - 200 கிராம் கருப்பட்டி - 600 கிராம் ஒவ்வொன்றையும் தனித்தனியே சுத்தி செய்துக் தூள் செய்து கொள்ள வேண்டும். கருபட்டியை தூள் செய்து உரலில் போட்டு, பூண்டு பருப்பை போட்டு சேர்த்து இடித்து, கடை சரக்குகளை ஒவ்வொன்றாக போட்டு மர உலக்கையால் இடித்து லேகியம் ஆக்கவும். இந்த லேகியத்தை அருநெல்லி அளவு காலை மற்றும் இரவு நன்றாக உமிழ் நீருடன் சப்பி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடிக்கவும். பயன்கள் : உடலில் தேங்கியுள்ள சகலவிதமான நீர்கட்டுகளும், சதைகளில் இறுகியுள்ள கொழுப்புகள், எலும்புகளில் தேங்கியுள்ள கொழுப்புகள், நுரையீரலில் தேங்கியுள்ள சளியும், கொழுப்பும் வெளியேறும். உடல் வற்றும். தேவையான கனம் குறைந்த உடன் மருந்தை நிறுத்தி விடவும். பத்தியம் : உருளைக் கிழங்கு, பூசணிக்காய், நீர்சத்தும், கொழுப்புசத்தை உருவாக்கும், ஐஸ், சோடா, வெளிநாட்டு குளிர்பானங்கள், எண்னெய் பலகாரம், புளிக்குழம்பு நீக்கவும்.

சீரணப் பொடி

  பகல் உணவில் (மதிய உணவு) இந்த சீரணப்பொடியை முதல் சாதத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு... சுத்தமான பசு நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும் பயன்கள் : ஊழிக்கால நோய்கள் வராது .... தொற்று நோய்கள் அணுகாது... அசீரணம் வராது ... நன்கு பசியெடுக்கும் .... உண்ட உணவு சீரணிக்கும். செய்முறை : சுக்கு சுத்தி செய்து தோல் நீக்கியது 100 கிராம் பால் பெருங்காயம் 100 கிராம் கறிவேப்பிலை 100 கிராம் திப்பிலி. 50 கிராம் நற்சீரகம். 50 கிராம் இந்துப்பு. 50 கிராம் இவை யாவற்றையும் எடைப்படி எடுத்து சூரிய ஒளி யில் காய வைத்து இடித்து பொடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் . இது தான் சீரணப் பொடி

கண்ணில் உண்டாகும் உஷ்ண பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்

  தேவையான பொருள் 1.மிளகு - 3 எண்ணிக்கை 2.தேன் - 10 மி.லி 3.பாதாம் பருப்பு - 10 எண்ணிக்கை 4.தண்ணீர் - 150 மி.லி செய்முறை ✍️கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். ✍️பிறகு பாதாம் பருப்பை எடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும். ✍️பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும். ✍️மேலும் இந்த நீருடன் இடித்த மிளகு மற்றும் பாதாம் பருப்பு பொடியை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். ✍️மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ✍️மேலும் வடிகட்டிய நீருடன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்க முடியும்.

நமசிவாய செந்தூரம்

  இலிங்கம் .. இரசம் .. வீரம் .. பூரம் ..தாளகம் .. இந்த ஐந்து விதமான சரக்குகளையும் நன்றாக சுத்தி செய்து எடுத்துக் கொள்ளவும் இவைகள் வகைக்கு .. ..50..கிராம் அளவுக்கு .. சுத்தி செய்த கெந்தகம் .. ..150.. கிராம் அளவுக்கு .. சுத்தி செய்த காந்தம் .. ..100.. கிராம் அளவுக்கு .. கரு ஊமத்தை இலை சாறு செல்லத் தக்க அளவுக்கு .. சோற்றுக் கற்றாழை சாறு செல்லத் தக்க அளவுக்கு .. செய்முறை :: முதலில் கெந்தகத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அதனுடன் இரசத்தை சேர்த்து அரைத்து நன்றாகக் கறுத்த பின்பு எடுத்து கொண்டு தாளகத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அரைத்து இதனுடன் இரச கெந்தி கலவையை போட்டு ஒன்றுபட கலந்து அரைத்து தனியே வைத்துக் கொண்டு இரசக்கற்பூரத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அரைத்து இதனுடன் வீரத்தை சேர்த்து அரைத்து எடுத்து கொண்டு இலிங்கத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அரைத்து இதனுடன் வீரம் பூரம் சேர்ந்த கலவையை போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு இதனுடன் இரச கெந்தி கலவையை போட்டு ஒன்றுபட கலந்து நன்றாக அரைத்து இதனுடன் காந்தத் தூள் சேர்த்து கலந்து அரைத்து பிறகு இதில் கரு ஊமத்தை இலை சாற்றை சிறுகச் சிறுக விட்டு இரண...

மகா இரசப் பதங்கம்

  சுத்தி செய்த இரசம்,, ..100.. கிராம் அளவுக்கு.. அரிதாரம்.. துருசு.. வெள்ளைப்பாடாணம்.. தொட்டிப் பாடாணம்.. இரசகற்பூரம்.. மிர்தார்சிங்கி.. சவ்வீரம் ..கெளரிப்பாடாணம்.. நெல்லிக்காய் கெந்தகம்.. இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சுத்தி செய்தது வகைக்கு பத்து கிராம் அளவுக்கு.. நவாச்சார ஜெயநீர்,, செல்லத்தக்க அளவுக்கு.. சங்கத்திராவகம்,, செல்லத்தக்க அளவுக்கு .. செய்முறை :: ஒவ்வொரு சரக்குகளையும் தனித்தனியே கல்வத்தில் போட்டு பொடித்து கொண்டு பிறகு அனைத்து சரக்குகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் அரைத்துக் கொண்டு பிறகு இதில் நவாச்சார ஜெயநீரை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து எடுத்து செம்பால் ஆன பதங்கப் பாத்திரத்தில் போட்டு மேல் பாத்திரத்தால் மூடிவைத்து உலுந்து மாவால் சீலை மண் ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து அடுப்பில் ஏற்றி திபாகினியாக இரண்டு சாமமும் கமலாக்கினியாக இரண்டு சாமம் நேரமும் பிறகு கடாக்கினியாக இரண்டு சாமம் நேரமும் எரித்து கொண்டு ஆறவைத்து கவசத்தை பிரித்து மேலேயுள்ள பாத்திரத்தில் இருக்கும் மருந்தையும் கீழே உள்ள பாத்திரத்தில் இருக்கும் மருந்தையும் சேர்த்து ...