Skip to main content

விஷபாக இளகம்


சுத்தி செய்த சுக்குத்தூள்,,
..100 .. கிராம் அளவுக்கு ..
ஏதேனும் ஒரு நல்ல முறையில் செய்து எடுத்த அயச்செந்தூரம்,,
மண்டூரச் செந்தூரம்,,
இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே வகைக்கு,,
..50 .. கிராம் அளவுக்கு..

திப்பிலி,, மிளகு,, இவைகள்
இரண்டையும் தனித்தனியே அரைத்து வஸ்திரகாயம் செய்து எடுத்த தூள்கள் வகைக்கு
..50 .. கிராம் அளவுக்கு..

கடுக்காய் தோல் இடித்து வஸ்திரகாயம் செய்த தூள்,,
..100 .. கிராம் அளவுக்கு..

கடுகு ரோகினி இடித்து வஸ்திரகாயம் செய்த தூள்,,
..20 .. கிராம் அளவுக்கு ..

இந்துப்பு,, எவாச்சாரம்,,
வெடியுப்பு,, வெண்காரம்,,
இவைகள் நான்கும் வகைக்கு
..10 .. கிராம் அளவுக்கு..

பிரண்டை சாறு,, கரிசாலை சாறு,,
இவைகள் இரண்டும் வகைக்கு,,
..600 .. மில்லி அளவுக்கு

பனைவெல்லம்,,
..200 .. கிராம் அளவுக்கு..
எலுமிச்சம் பழச்சாறு,,
..100 ..மில்லி அளவுக்கு ..


செய்முறை ::
ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் ஏற்றி இதில் பனைவெல்லத்தை பொடித்து போட்டு அதில் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி பாகுபோல்
கிண்டி இதில் செந்தூரங்கள்
இரண்டையும் போட்டு நன்றாக கலந்து பிறகு இதில் இரண்டு
வகையான சாறுகளையும் ஊற்றி அடுத்து உப்பு வகைகளை போட்டு நன்றாக கலக்கிக் கொண்டு பிறகு மேற்படி சூரணங்களை ஒன்றுபட கலந்து எடுத்து இந்த கலவையில் போட்டு நன்றாக கலந்து இளகம் பதத்தில் இறக்கி ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும்..!!


மருந்து அளவு ::

தினமும் இரண்டு வேளை
சுண்டைக்காய் அளவு வெந்நீரில் எடுத்துக் கொள்ளவும் ..

தீரும் நோய்கள் ::

விடபாகம் .. பாண்டு .. வீக்கம்..
காமாலை .. அனல்மந்தம் ..
முதலிய நோய்கள் குணமாகும்..

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...